×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட ஒவ்வொரு ஸ்டிராங் ரூம் கதவின் முன்பும் கூடுதலாக ஒரு கேமரா: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட ஒவ்வொரு ஸ்டிராங் ரூம் கதவின் முன்பும் கூடுதலாக ஒரு சிசிடிவி கேமராவை பொருத்த அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறை ஆணையர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், பொதுப்பணித்துறை (சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல்) மாவட்ட அளவிலான பொறியாளர்களுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சி வசதி மூலம் ஸ்டிராங் ரூமின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட ஒவ்வொரு ஸ்டிராங் ரூம் கதவுகளின் வெளிப்புறத்திலும் சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர ஒட்டுமொத்த பாதுகாப்பு நோக்கத்திற்காக முழு வாக்கு எண்ணும் மையமும் போதுமான எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்கள் மூலம் பொது கண்காணிப்பின் கீழ் உள்ளது.

இடையூறு இல்லாத சிசிடிவி காட்சிகளை உறுதி செய்வதற்காக, வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட ஒவ்வொரு வலுவான அறையின் கதவின் முன்பும் கூடுதலாக ஒரு சிசிடிவி கேமராவை பொருத்த ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு கடந்த 2ம் தேதி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை பார்ப்பதற்கு தனியான பிரத்யேக லைன், ஸ்விட்ச், ரூட்டர், என்விஆர் மற்றும் டிவியுடன் அரசியல் கட்சி முகவர் காட்சிகளை பார்க்க முடியும். ஸ்டிராங் ரூம் கதவுக்கு முன்னால் பொருத்தப்பட்டுள்ள மற்ற சிசிடிவி கேமராக்களில் தோல்வி ஏற்பட்டாலும் கூட பார்க்க முடியும்.

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி வசதிக்காக தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய மின் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டால், டீசல் ஜெனரேட்டரை இயக்கும்போது, ​​அந்த இடைவெளிக்கு தடையின்றி மாறுவதை உறுதிசெய்ய சிசிடிவி கேமராக்களுக்கான யுபிஎஸ் காப்புப்பிரதி, மின்னழுத்த ஏற்ற இறக்கங்களை தவிர்ப்பது, சிசிடிவி நிறுவலுக்கான ஸ்டெபிலைசர், டீசல் ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்னல் காரணமாக சிசிடிவி கேமராக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சார்ஜ் ப்ரொடெக்டர்/மின்னல் அரெஸ்டர் போன்ற நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட ஒவ்வொரு ஸ்டிராங் ரூம் கதவின் முன்பும் கூடுதலாக ஒரு கேமரா: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : District ,CHENNAI ,Election ,Chief Electoral Officer ,Tamil Nadu ,Sathyaprada ,Dinakaran ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...